Monday, June 1, 2015

இப்படியும் போடலாம் கோலம்.

*  அரிசி  மாவில்  தண்ணீர்  சற்று  அதிகமாகி  விட்டதா,  கவலை  வேண்டாம்.  சிறிதளவு  மைதா  மாவினை  கலந்து  இழுங்கள்,  கோலம்  அழகாக  வரும்.
*  அரிசி  மாவில்,  சாதம்  வடித்த  கஞ்சியினை  கொஞ்சம்  கலந்து  கோலம்  இழுத்துப்  பாருங்களேன்,  இந்தக்  கோலம்  2  நாட்கள்  கூடுதலாகவே
   இருக்கும்.  சட்டென்று  உதிராது.
*  பச்சரிசியை  ஊறவைத்து,  கோலம்  போட  நேரமில்லையா.  இதோ,  இன்ஸ்டன்ட்  மாவு. உலர்ந்த  பச்சரிசி  மாவுடன்  குளிர்ந்த  நீரை  கொஞ்சம்  ஊற்றி
   10  நிமிடம்  ஊற  வையுங்கள்,  கோலமாவு  உடனே  ரெடி.
*  பால்  பிழிந்த  தேங்காய்  பூவுடன்  வண்ணங்களைக்  கலந்து  கோலம்  போட்டால்,  கோலம்  மிகவும்  அழகாக  இருக்கும். இதை  நன்கு  காயவைத்து
   பின்பு  போடவும்.
*  கலர்  மெழுகுவர்த்திகளை  ஏற்றி,  ஓர்  பாத்திரத்தில்  தண்ணீர்  வைத்து  அதில்  மெழுகுவர்த்திகளை  காண்பித்தால்  உருகும்  மெழுகு  தண்னீரில்
   விழுந்த  மணிகளாக  வரும்.  இந்த  வண்ண  மணிகளை  வைத்து  ரங்கோலி  செய்யலாம்.  ஆரத்தி  தட்டுகளில்  கோலமாக  ஒட்டலாம்.
-- பி.பத்மாவதி பெருமாள்,  காரைக்கால்.
--   தினமலர், கோல மலர்.  12.12.12.  

No comments: