Tuesday, June 2, 2015

சிவன் சிறப்புச் செய்திகள்.

*  நீடூரில்  ஒரு  நண்டு  சிவபெருமானை  வணங்கியதால்  சிவலிங்கத்தின்  உச்சியில்  நண்டு  வளை  உள்ளது.  இங்கு  சுவாமியின்  பெயர்  அருட்சோமநாதர்.
*  தலைச்சங்காட்டில்  திருமால்  சிவபெருமானை  வழிபட்டு  பாஞ்சஜன்ய  சங்கைப்  பெற்றதால்,  அங்கு  சங்கு  வடிவில்  மூலவராகக்  காட்சியளிக்கிறார்
   ஈசன்.  இறைவனுடைய  பெயர்  சங்கராண்யேஸ்வரர்.
*  அமர்நாத்தில்  உள்ள  பனிலிங்கம்  சந்திரனைப்போலவே  15  நாளில்  வளர்ந்து  பௌர்ணமியில்  முழுலிங்கமாகவும்,  அடுத்த  15  நாளில்  தேய்ந்து
   அமாவாசையில்  மறைவதும்  சிறப்பம்சம்.
*  செம்பனார்கோயிலில்  உள்ள  சிவபெருமான்  சொர்ணபுரீஸ்வரர்  என்ற  பெயருடன்  32  இதழ்களை  உடைய  தாமரை  வடிவ  ஆவுடையாரில்  சுயம்பு
   லிங்கமாக  எழுந்தருளியிருக்கிறார்.    
*  காஞ்சிபுரத்தில்  உள்ள  கைலாசநாதர்  ஆலயத்தில்  சிவன்  எட்டு  கைகளுடன்  சிற்பமாகக்  காட்சியளிக்கிறார்.
*  மகாராஷ்டிரா  மாநிலம்  எல்லோரா  குகைகளுக்கு  அடுத்து  உள்ள  ' குஸ்மேசம்'  என்னும்  ஊரில்  உள்ள  சிவலிங்கம்  குங்குமத்தால்  ஆனது.
*  பொதுவாக  பெருமாள்  கோயிலில்தான்  சடாரி  வைப்பார்கள்.  ஆனால்,  மூன்று  கோயில்களில்  மட்டும்  சடாரி  வைக்கப்படுகிறது.  அவை
   காஞ்சிபுரத்தில்  உள்ள  ஏகாம்பரேஸ்வரர்  கோயில்,  காளஹஸ்தி  கோயில்  மற்றும்  சுருட்டப்பள்ளி  சிவன்  கோயில்  ஆகும்.
*  திருவக்கரை  வக்கிரகாளியம்மன்  கோயிலில்  உள்ள  சிவபெருமானது  பெயர்  சந்திரமௌலீஸ்வரர்.  அவர்  மும்முக  லிங்கமாக  தரிசனம்  அளிக்கிறார்.
   அதில்  கிழக்கு  முகம்  தத்புருஷ  லிங்கம்  என்றும்,  வடக்கு  முகம்  வாமதேவ  முகமாகவும்,  தெற்கு  முகம்  அகோர  மூர்த்தியாகவும்  வணங்கப்படுகிறார்.
*  ஐந்துமுகம்  கொண்ட  சிவன்,  ஏழு  தலங்களில்  அருள்புரிகிறார்.  1.காசி,  2.நேபாளம்,  3.காளஹஸ்தி,  4.திருவானைக்காவல்,  5.சித்தேஸ்வர்  மகாதேவ்,
   6.ராசிபுரம்,  7.காஞ்சி  கைலாசநாதர்  கோயில்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012.  

No comments: