Wednesday, June 17, 2015

இயற்கை மருத்துவம்

இயற்கை  மருத்துவத்தால்  கழுத்து  வலிக்கு  ' குட்பை '  சொல்லலாம்.
     கழுத்து  வலி  நீக்கும்  இயற்கை  மருத்துவம்:
     பல  சிகிச்சைகள்  உள்ளன.  அவை  நீர்ச்  சிகிச்சை,  மண்  சிகிச்சை,  வெப்பச்  சிகிச்சை,  மூலிகை  மருத்துவம்,  உடற்பயிற்சிகள்,  ஆசனங்கள்,  தியானம்,  உணவில்  திருத்தம்  முதலியவையாகும்.
     நீர்ச்  சிகிச்சை:  காலையில்  எழுந்தவுடன்  ஒரு  பெரிய  துண்டை  நீளவாக்கில்  நான்காக  மடித்து  தண்ணீரில்  நனைத்து  இலேசாக  பிழிந்து  அடிவயிற்றில்  கட்டிக்கொள்ள  வேண்டும்.  இதற்கு  ஈரத்துணிப்பட்டி  என்று  பெயர்.  இதனால்  அடிவயிற்றுச்  சூடு  தணிந்து  எளிதில்  மலம்  கழியும்.  வலி  நிற்கும்.    அரை  மணி  நேரத்தில்  வலி  நிற்கும்.
.     மண்  சிகிச்சை:  துணியில்  களிமண்  அல்லது  கரையான்  புற்றுமண்ணைத்  தண்ணீர்விட்டு  பிசைந்து  வைத்து  மடித்து  அடிவயிற்றில்  கட்டிக்கொண்டால்  மலம்  கழித்து,  வாயு  நீங்கி,  கண்  வலி,  காது  வலி,  கழுத்துவலி  முதலிய  எந்த  வலியும்  நீங்கிவிடும்.
     வெப்பச்  சிகிச்சை:  தவிட்டை  வாணலியில்  சூடாக்கி  வலி  உள்ள  இடத்தில்  ஒத்தடம்  கொடுக்கலாம்.வெந்நீர்  பையில்  சூடான .வெந்நீரை  ஊற்றி  அடைத்து  அதை  வலி  உள்ள  இடத்தில்  வைக்கலாம்.  இதை  ஒரு  நாளைக்கு  10  நிமிடம்  வீதம்  இரண்டு  தடவை  செய்யலாம்.  பொறுக்கக்கூடிய  அளவு  சூடான வெந்நீரில்  உப்பு  கலந்து  முதுகு  தண்டு  குளியல்  தொட்டியில்  4  விரற்கடை  அளவு  ஊற்றி  கழுத்து,  முதுகு  படும்படியாக  30  நிமிடம்  படுத்திருக்கலாம். வெந்நீர்  தசைப்பிடிப்புகளை  அகற்றுகிறது.  ரத்தம்,  நீர்ச்சத்து,  ரத்த  ஓட்டம்  கூடுகிறது.  மூலிகை  மருத்துவம்  இஞ்சியின்  மேல்தோலைச்  சீவிய  பிறகு  இடித்து  நசுக்கி  நல்லெண்ணையில்  வதக்கி  பொறுக்கும்  சூட்டில்  தோள்பட்டையிலும்,  பின்  கழுத்திலும்  வைத்துக்  கட்டலாம்.  சுக்குப்  பொடியை  நல்லெண்ணையில்  கலந்து  சுட  வைத்து  வலி  உள்ள  இடத்தில்  தேய்த்துக்  கொள்ளலாம்.  வெள்ளைப்பூண்டு  10  பற்களை  60  கிராம்  நல்லெண்ணையில்  இட்டு  பூண்டு  சிவப்பு  நிறமாக  மாறும்வரை  காய்ச்சி,  பின்பு  பூண்டுகளை  நசுக்கி  வலி  உள்ள  இடத்தில்  பூசவும்.  3  மணி  நேரம்  கழித்து  குளிக்கவும்.  இப்படி  15  நாட்கள்  செய்யவும்.  ருமாட்டிகோ  எண்ணையும்,  பிண்ட  தைலத்தையும்,  கற்பூரத்தையும்  கலந்து  காய்ச்சி  ஆற  வைத்துக்  கொண்டு  தேவையான  போது  வலி  உள்ள  இடத்தில்  சூடு  பறக்க  தேய்த்தால்  வலி  நீங்கும்.  அதே  போல்  பின்  கழுத்துக்குக்  கீழே  தொடங்கி  தோள்பட்டைக்குச்  சென்று  நடுமுதுகு  வரை  ஒரு  முக்கியமான  தசை  செல்கிறது.  அதை  வலுப்படுத்தக்கூடிய  பயிற்சிகள்  கழுத்து  வலியை  நீக்கும்.  மசாஜ்  மற்றும்  தியானம்  பயிற்சி  மூலம்  வலியை  நீக்கலாம்.
-- மெய்யப்பன்,  யோகாசன  ஆசிரியர்.  மயிலாப்பூர்.
--   தினமலர் . டிசம்பர்  26,  2012. 

No comments: