Monday, June 15, 2015

வைகுண்ட ஏகாதசியில் ரத்தின அங்கியும் முத்தங்கியும் ஏன்?

 வைகுண்ட  ஏகாதசி  நாளில்  ஸ்ரீரங்கம்  கோயிலில்  உற்சவர்  நம்பெருமாள்  முற்றிலும்  ரத்தினங்களால்  ஆன  அங்கி   அனிந்திருப்பார்.  இந்த  ரத்தின  அங்கி  சூரியனின்  கதிர்வீச்சுக்கு  சமமானது.  இந்த  கதிர்வீச்சு  தெய்வீக  மற்றும்  மருத்துவ  குணம்  உள்ளது.  என்னதான்  மருத்துவ  குணமிருந்தாலும்,  அளவை  மிஞ்சக்கூடாது  என்பதற்காகத்தான்  அந்த  ரத்தின  அங்கியில்  பாதிக்குமேல்  (  பெருமாளின்  இடுப்புக்குக்கீழ் )  சல்லா ( மல் )  துணிகொண்டு  மறைத்திருப்பார்கள்.  இவ்வாறு  சூரிய  கிரணங்கள்  பட்ட  பக்தர்கள்  மேனியில்,  பாதிப்பு  ஏற்படாதிருக்க  வேண்டும்  என்பதற்காகவே,  பக்தர்கள்  மூலவரை  தரிசிக்க  வரும்போது  அவர்கள்  மீது  குளிர்ச்சியான  சந்திர  கிரகணங்கள்  படவேண்டும்  என்ற  கருத்தில்  மூலவருக்கு  சந்திரனின்  கதிர்வீச்சு  குணம்  கொண்ட  முத்துக்களால்  ஆன  அங்கி  அணிவிக்கப்பட்டிருக்கும்.
     சந்திரகிரகணங்கள்  குளிர்ச்சியானவை  என்பதாலும்,  சூரிய  கிரணங்களால்  ஏற்பட்ட  வீரியத்தை  ஈடுசெய்யும்  வகையிலும்  பெருமளவிலான  முத்துக்கள்  கொண்ட  பெரிய  அங்கி,  பெரிய  பெருமாள்  ( ரங்கநாதர் )  திருமேனியில்  அணிவிக்கப்படுகிறது.  இதிலிருந்து  வைகுண்ட  ஏகாதசி  நாளில்  ஏன்  உற்சவருக்கு  ரத்தின  அங்கியும்,  மூலவருக்கு  முத்தங்கியும்  அணிவிக்கப்படுகிறது  என்பதை  அறிந்து  கொள்ளலாம்.
---  தினமலர் . டிசம்பர்  23,  2012. 

No comments: