Wednesday, June 10, 2015

அமைதி அது என்னுள்ளே...

மன  அழுத்தம்.
     மனிதனுக்கு  வரக்கூடிய  நோய்களில்  75  முதல்  90  சதவீதம்  வரை  மன அழுத்தத்தின்  மூலமே  வருவதாக  மருத்துவ  உலகம்  கூறுகிறது.
     மன அழுத்தம்  இரு  வகைகளில்  ஏற்படலாம்:  1.நம்மைச்சூழ்ந்த  சமூகத்தின்  செயல்பாடுகள்.  2.நமது  வாழ்க்கை  முறை.
     நம்மைச்சூழ்ந்த  சமூகத்தின்  செயல்பாடுகள்,  குடும்பச்சூழல்,  வாழ்க்கைத்துணையின்  விட்டுக்கொடுத்தல்  அல்லது  புரிந்து  கொள்ளுதல்  இல்லாத  நிலை,  பணிபுரியும்  இடங்களில்  உள்ள  வேலை  நெருக்கடி  போன்றவை  கூட  ஒருவரை  மன  உளச்சலுக்கு  உள்ளாக்குகின்றன.
     எதிர்பாராத  சூழலுக்கு  ஒருவன்  தள்ளப்படும்  பொழுது  அதிக  மன அழுத்தம்  ஏற்படுவதாக  மருத்துவர்கள்  குறிப்பிடுகின்றனர்.  அதிக  எதிர்பார்ப்பு,  கிடைத்ததில்  திருப்தி  இல்லாத  நிலை  கூட  மன உளச்சலுக்கான  காரணங்களாகின்றன.  எத்தகைய  எதிர்பார்ப்புகளும்  இல்லாத  குழந்தை  மகிழ்ச்சியுடன்  விளையாடுகிறது.  வளர்ந்த  மனித  குணங்கள்கூட  மன அழுத்தத்திற்கு  உள்ளாவதாக  ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.  அதிக  வெளிச்சம்,  அதிக  சப்தம்  போன்றவைகூட  மனிதர்களை  மன உளச்சலுக்கு  உள்ளாக்குவதாக  உளவியலார்  குறிப்பிடுகின்றனர்.
     " Peace  is  no  where  but  with  in  myself "
       அமைதி  என்பது  எங்கேயும்  அல்ல  அது  என்னுள்ளே !
-- கு.கோவிந்தராஜன்,  விரிவுரையாளர்.
--  ஆசிரியர்  நண்பர்,  டிசம்பர்  2012.  காரைக்கால்  பட்டதாரி  ஆசிரியர்  சங்க  திங்களிதழ்.
-- இதழ்  உதவி:  செல்லூர் கண்ணன். 

No comments: