Sunday, June 7, 2015

கோயில் செய்திகள்.

ஆனந்தம்  தரும்  அபிஷேகங்கள்!
*  கேரளாவில்  உள்ள  கொடுங்கலூரில்,  பகவதி  அம்மனுக்கு  பால்,  தயிர்  போன்ற  அபிஷேகங்களுடன்  தவிடும்  அபிஷேகம்  செய்யப்படுகிறது.
*  தஞ்சை  மாவட்டம்  திரும்புறம்பியம்  தலத்திலுள்ள  பிரளயம்  காத்த  விநாயகருக்கு  சதுர்த்தி  அன்று  மட்டும்  ஒரு  குடம்  தேன்  அபிஷேகம்
   செய்யப்படுகிறது.  மற்ற  நாட்களில்  அபிஷேகம்  கிடையாது.
*  திருவலஞ்சுழியிலுள்ள  விநாயகர்  கடல்  நுரையால்  செய்யப்பட்டவர்.  ஆதலால்  அவருக்கு  பச்சைக்கற்பூரம்  தூவுவதைத்  தவிர  வேறு  அபிஷேகம்
   கிடையாது.
*  திருக்குற்றாலம்  குற்றாலநாதருக்கு  மூலிகை  வேர்கள்,  மருந்துச்  சரக்குகள்  ஆகியவற்றை  அரைத்துக்  காய்ச்சப்படும்  தைலம்  அபிஷேகம்
   செய்யப்படுகிறது. பிறகு  இந்தத்  தைலம்  பிரசாதமாகத்  தரப்படுகிறது.
*  திருவாரூர்  மாவட்டம்  பொன்னிறை  என்னும்  ஊரில்  உள்ள  அகஸ்தீஸ்வரருக்கு  ஆண்டுதோறும்  பங்குனி  உத்திரத்தன்று  நெல்லிப்பொடி  அபிஷேகம்
   செய்யப்படுகிறது.
*  சென்னை  குரோம்பேட்டை  கணபதிபுரத்தில்  உள்ள  செங்கச்சேரி  அம்மன்  ஆலயத்தில்  பௌர்ணமியன்று  மருதாணி  இலை  அபிஷேகம்
   நடைபெறுகிறது. பின்னர்  அந்த  இலை  கன்னிப்  பெண்களுக்கு  பிரசாதமாக  வழங்கப்படுகிறது.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012.

No comments: