Monday, July 13, 2015

நமஸ்காரம்.

  நமஸ்காரங்களில்  ஐந்து  வகை  உள்ளன.  அவை  ஏகாங்கம்,  திலியாங்கம்,  திரியாங்கம்,  பஞ்சாங்கம்,  அஷ்டாங்கம்  என்பன.  உடலுருப்புக்கு  அங்கம்  என்று  பொருள்.
     ஏகாங்க  நமஸ்காரம்  என்பது  தலையாகிய  உறுப்பை  மட்டும்  தாழ்த்தி  வணங்குதலாகும்.
     திவியாங்க  நமஸ்காரம்  என்பது  வலக்கையை  மட்டும்  தலையில்  குவித்து  வணங்குவதாகும்.
     திரியாங்க  நமஸ்காரம்  என்பது  தலையின்  மீது  இரண்டு  கைகளையும்  குவித்து  வணங்குதலாகும்.
     பஞ்சாங்க  நமஸ்காரம்  என்பது  தலை,  இரண்டு  கைகள்,  இரண்டு  முழங்கால்கள்  ஆகிய  ஐந்து  உறுப்புகளும்  தரையில்  பொருந்தும்படி
வணங்குதலாகும். இந்த  வகை  நமஸ்காரத்தை  பெண்கள்தான்  செய்ய  வேண்டும்.  ஸ்திரீகளின்  திருமாங்கல்யம்  தரையில்  படக்கூடாது  என்பதற்காகத்தான்  மண்டியிட்டு  இந்த  நமஸ்காரத்தைச்  செய்யவேண்டும்  என்று  ஆன்றோர்கள்  சொல்லியுள்ளனர்.  மேலும்,  இதை  பெண்கள்  ஒருதரம்  செய்தல்  குற்றமாகும்.  3,  5,  7  அல்லது  12  முறை  செய்யவேண்டும்.
     அஷ்டாங்கம்  என்பது  தரையோடு  தரையாக  படுத்துனம்முடைய  தலை,  இரண்டு  கைகள்,  இரண்டு  செவிகள்,  மோவாய்,  இரண்டு  புஜங்கள்  ஆகிய  எட்டு  அங்கங்களும்  பூமியில்  படும்படி  செய்யவேண்டும்.  இந்தவகை  நமஸ்காரத்தை  ஆண்கள்தான்  செய்ய  வேண்டும்.
--- மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )  

No comments: