Friday, July 31, 2015

'குரு பூர்ணிமா' - ஆடிப் பவுர்ணமி!

  ( சிறப்பு )
( இன்று  குரு  பூர்ணிமா )
     ஆடி  மாதத்துப்  பவுர்ணமி  நாளைக்  'குரு  பூர்ணிமா'  என்று  சொல்வார்கள்.  குரு  என்று  இங்குக்  குறிப்பிடப்படுபவர்  வேதவியாசர்  ஆவார்.
     இவர்  நாராயணனை  முதல்வராகக்கொண்ட  குரு  பரம்பரையில்  வருபவர்.  நாராயணனிடமிருந்து  பிரம்மதேவர்  பிறந்தார்.  பிரம்மனிடமிருந்து  வசிஷ்டர்  வந்தார்.  வசிஷ்டர்  மகன்  சக்தி.  சக்தியின்  மகன்  பராசரர்.  பராசரருக்கும்  சத்தியவதிக்கும்  மகனாகப்  பிறந்தவர்  வியாசர்.
     வேதவியாசர்  அருளிய  பிரம்மசூத்திரத்துக்கு  ஸ்ரீசங்கரர்  உரை  எழுதியிருக்கிறார்.  குரு  பூர்ணிமா  வியாச  பூஜையை  முடித்தபின்  சாதுர்மாஸ்ய  விரத  சங்கல்பம்  நடக்கும்.  சங்கல்பம்  செய்துகொண்ட  இடத்தில்  அந்த  துறவியர்  நான்கு  பட்சங்கள்  தங்கியிருப்பர்.
--தினமலர்.  பக்திமலர்.  30-7-2015.
     பூமத்திய  ரேகைக்கு  வடக்கே  சூரியனின்  ஓட்டம்  இருக்கும்போது ( ஜனவரி  முதல்  ஜூன்  வரை )  உத்ராயணம்  என்கிறோம்.  சூரியனின்  ஓட்டம் தெற்கே  இருக்கும்போது ( ஜூலை  முதல்  டிசம்பர்  வரை )  தட்சிணாயணம்  என்கிறோம்.
     உத்திராயணத்தில்  வரும்  முதல்  பவுர்ணமியை ( தை  மாதம் )  'தன்ய  பவுர்ணமி'  என  அழைக்கிறோம்.  தட்சிணாயணத்தில்  வரும்  முதல்  பவுர்ணமியை ( ஆடி  மாதம் )  'குரு  பவுர்ணமி'  என்கிறோம்.  இந்த  பவுர்ணமி  ஜூலை  மாதத்தில்  ஏற்படும்  தட்சிணாயண  காலத்தில்  6  மாதங்கள்  'உள்வாங்கிக்கோள்ளும்  தன்மையடையதாகவும்,  உத்திராயண  காலத்தில்  6  மாதங்கள்  'நிறைவடையும் '  தன்மையுடையதாகவும்  உள்ளன.
--சத்குரு  ஜக்கி  வாசுதேவ்.
-- தினமலர். திருச்சி. 31- 7-2015.  

No comments: