Saturday, April 5, 2014

தமாஷ்...தமாஷ்...

*  ராமு :  " எனக்குச் சின்ன வயசுலேயே காது குத்திட்டாங்ககடா ! "
   சோமு : " எந்த இயர்லடா ? ! "
   ராமு :  " ரெண்டு இயர்லயும்தான் ! "
* ஆசிரியர் :  " முகலாயர் ஆட்சி எதிலிருந்து எது வரை இருந்துச்சு சொலுங்க பார்க்கலம் ! "
   மாணவன் : " நான்காம்  பக்கத்தில் இருந்து எட்டாம் பக்கம் வரைக்கும் சார் ! "
*  ராமு : " பாட்டி பேச்சைக் கேட்டதால் பரீட்சை ஹாலில் மாட்டிகிட்டியா ? ! "
   சோமு : " ஆமாம், வீட்ல இருந்து கிளம்பும்போது,  ' பார்த்து எழுதுடா'னு பாட்டிதான் சொல்லிச்சு ! "
* ரமேஷ் : " எங்க ஸ்கூல்ல சுற்றுலாக் கூட்டிட்டுப்போறாங்க பாட்டி !"
  பாட்டி : " அங்கே இங்கே வெளியில சுத்தி அலையாம, ஒழுங்கா ஒரே இடத்தில் உட்கார்ந்துப் பார்த்துட்டு வா !"
--    சுட்டி விகடன். 30-04-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.   

No comments: