Tuesday, April 29, 2014

இரவாடி, பகலாடி, பொழுதாடி?

 இரவில் மட்டும் தன் இருப்பிடத்தை விட்டு வெளிவந்து இரைதேடும் உயிரினங்களுக்கு இரவாடி என்று பெயர். ஆங்கிலத்தில் நாக்டர்னல் கிரீச்சர்
 ( nocturnl  creature ).  பெரும்பாலான ஆந்தைகள், வௌவால்கள் போன்றவை இரவாடிகளாகும்.  இரவாடிகளுக்கு மற்ற விலங்குகளைவிட மோப்ப உணர்வு, செவியுணர்வு போன்றவை நுட்பமாக இருக்கும்.  இருட்டிலும் பார்க்கும் விதத்தில் அவற்றின் கண்கள் நுட்பமாக அமைந்திருக்கும்.
     இதேபோல பகலில் நடமாடி, இரைதேடி வாழும் உயிரினங்களுக்குப் ' பகலாடிகள்'  என்று பெயர்.  ஆங்கிலத்தில் டயர்னல் ( diurnel ).
     அந்திப் பொழுதிலும், விடியற்பொழுதிலும் நடமாடு, இரைதேடி வாழும் உயிரினங்களுக்கு ' பொழுதாடிகள் ' என்று பெயர். ஆங்கிலத்தில் கிரிஸ்கிலர
( crepuscular )  தங்களுக்குத் தகுந்தாற்போல், பகல்,இரவு ஆகிய இரு நேரங்களிலும் நடமாடி, இரைதேடி வாழும் உயிரினங்களுக்கு ' இருபொழுதாடிகள் ' என்று பெயர்.  ஆங்கிலத்தில் கேதிமரல் ( cathemeral ) என்று பெயர்.
     இரவாடிக்கு ' இரவு வாழ்வி ' என்ற சொல்லும்,  பகலாடிக்கு ' பகல் வாழ்வி ' என்ற சொல்லும் புழக்கத்தில் உள்ளபோதிலும், தமிழில் எழுதும் சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள் இரவாடி, பகலாடி என்ற சொற்களே பொருத்தமானது என்று கருதுகிறார்கள்.
-- சந்தனார். அறிவோம் நம் மொழியை. கருத்துப் பேழை.
--   ' தி இந்து 'நாளிதழ். புதன். அக்டோபர் 9, 2013.

No comments: