Sunday, April 13, 2014

முதுமை.

   ( சிறப்பு ).
     முதுமையின் பிரச்சினை தனிமை.  அது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முதுமையை அதிகரிக்கச் செய்கிறது.  முதுமையின் அடிப்படை இலக்கணங்கள் இவை.
     சென்னையில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உங்கள் பெயர், முகவரி, வயது, தொடர்பு எண், அருகில் உள்ள காவல் நிலையம் உள்ளிட்ட விவரங்களைப் பதிந்துவிட்டீர்களா? இல்லை எனில் உடனே செய்யுங்கள்.  அது மிக எளிது. பாதுகாப்பும்கூட.  காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை 044  -23452320 எங்கிர தொலைபேசி எண்ணுக்கு பேசி உங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம்.  தொலைநகல் ( ஃபேக்ஸ் ) மூலம் பதிவு செய்ய விரும்புவோர் 044 - 25615028  என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.  இதன்மூலம் அடிக்கடி உங்கள் முகவரிக்கு வந்து உங்கள் உடல் நலம், பாதுகாப்பு குறித்து விசாரித்து செல்வார்கள்.  ஏதேனும் பிரச்சினை எனில் நடவடிக்கை எடுப்பார்கள்.  எனவே, சென்னையில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் 'யாரும் இல்லையே' என்று கவலைப்படாதீர்கள்.  காவல்துறை உங்களுகு கைகொடுக்கிறது.
_  'தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஏப்ரல் 13,2014.  

No comments: