Monday, April 7, 2014

'நெட்'டுக்குத்து

   ( சிறப்பு )
செய்தி :  ஆகாய வழியாக வருபவருக்கு மத்திய அரசின் சாதனைகள் எப்படி தெரியும்?  --  ப,சிதம்பரம்.
குத்து :    நீங்க டெல்லியில் இருந்து வரும்போது எப்படி நடைபயிற்சியா சார்?  --  படிக்காதவன்.

செய்தி :  கட்சியில் இருந்து மட்டும்தான் நீக்க முடியும்.  மகன் இல்லையென நீக்க முடியுமா?  --  அழகிரி.
குத்து :    இவரை யாராவது கடத்தி எலக்சன் முடியற வரை ஒளிச்சு வைங்கப்பா.  --  சி.பி.செந்தில்குமார்.

செய்தி :  கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறென்.  --  கருணாநிதி.
குத்து :    தலைவா ! எப்போ பாரூ உங்க குடும்பத்தையே பார்த்துட்டிருந்தா எப்படி?  --   சி.பி.செந்தில்குமார்.

செய்தி :  அன்புமணி ராமதாஸ், விஜய்காந்தை விருந்துக்கு அழைத்தார்.
குத்து :    தேர்தல் முடிஞ்சி சண்டை போடும்போது பேச டயலாக் ரெடி 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துவிட்டார்'.  --  ரோபல்
                காந்த்.

செய்தி :  காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.  --  மோடி.
குத்து :    சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி, மேனகாகாந்தி எல்லாம் பாதுகாப்பாத்தானே இருக்காங்க?  --    சி.பி.செந்தில்குமார்.

செய்தி :  அம்மாவிடம் எதை வேண்டுமானாலும் பெறலாம்.  --  நாஞ்சில் சம்பத்'
குத்து :    அண்ணனோட அடுத்த டார்கெட் ஹெலிகாப்ற்ற் போல!  நீ, அடிச்சு ஆடுண்ணே.  --  ட்விட்டர் எம்.ஜி.ஆர்
--- 'தி இந்து' நாளிதழ்களிலில் இருந்து... 

No comments: