Wednesday, April 23, 2014

கேளுங்கள் கொடுக்கப்படும் !

  ( சிறப்பு ).
     நரேந்திர மோடி, அரவிந்த் கேஜ்ரிவால், ராகுல் காந்தி இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
     நீங்கள் ஏன் என்னை சிக்கலில் மாட்டிவிட விரும்புகிறீர்கள்?   நரேந்திர மோடியின் பின்னணியில் வெற்றிக் கதை இருக்கிறது.  இந்த நாட்டிற்கு அது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.    அரவிந்த் கேஜ்ரிவால், மிகவும் அற்புதமான சில விஷயங்கள் செய்திருக்கிறார்.  யாரும் பேசத் துணியாத விஷயங்களை அவர் பேசினார். அவர் போன்ற நபர்கள் நமது பாராளுமன்றத்தில் அதிகம் இருக்க வேண்டும்.  ஆனால் அவர் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் எனக்கு அவ்வளவாக ஒப்புதல் இல்லை.  அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமானால் தேசம் அழிவுப்பாதைக்குச் செல்லும்.  இலவசங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைகளைத்தான் ஏற்படுத்தும்.  மோடி முன்னேற்றம் பற்றி பேசுகிறார்.  கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார்.  ஆனால், ராகுல் காந்தி எது பற்றி பேசுகிறார் என்பது இன்னமும் எனக்கு தெளிவாக இல்லை.
-- சத்குரு ஜக்கி வாசுதேவ்., ( கேளுங்கள் கொடுக்கப்படும் ! வினா விடை ,  தொடரில் )
-- ஈஷா காட்டுப்பூ.  பிப்ரவரி 2014.

No comments: