Tuesday, April 8, 2014

குபேரன் !

 1,00,00, 000,000,00,00,000  இந்த எண்ணுக்கு என்ன பெயர் தெரியுமா?
 தமிழில் சொல்ல வேண்டுமானால் ' சதாமரை ' , வட மொழியில்  ' பத்மம் '.  அளவிட முடியாத பேரெண்களாக மூன்று எண்களைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர். ' தாமரை,  வெள்ளம்,  ஆம்பல் ' எனவரும் மாபெரும் தானையர் என்பது தொல்காப்பியம்.  குபேரனிடமுள்ள செல்வத்தை ' தாமரை ' மூலம் அளக்க முடியும்.  இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான செல்வங்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறான் குபேரன்.  அவனுக்கு அவற்றை வழங்கியவர் எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமான்.
குபேரனின் பயோடேட்டா :
     குபேரன் திசை  --  வடக்கு. (  வடக்கு திசையில்தான் குபேர மலை இருக்கிறது.  இமயமலையில் ஒரு பகுதியில் இருக்கும் குபேர பட்டணத்தின் பெயர் அழகாபுரி ).
மனைவி  -  சித்ரரேகை.
வாகனம்  -  குதிரை,  கிளி,  நரன்.
ஆயுதம்  -  வாள் ( கட்கம் ).
விமானம்  -  புஷ்பக விமானம்.
புதல்வன்  -  நளகூபன்,  மணிக்ரீவன்.
ஒற்றைக்கண் கொண்டவன்.  வேதங்களால் போற்றப்பட்டவன்.  பிரம்மதேவனின் நிழலுருவில் இருந்து அவதரித்தவர்கள், தேவ கணத்தைச் சேர்ந்தவர்கள் கின்னர்கள்,  இவர்கள் மனித உடலும், குதிரை முகமும் உடையவர்கள்.
-- புலவர். வெ.மகாதேவன்.
-- தினமலர். பக்திமலர். அக்டோபர்  31, 2013.  

No comments: