Thursday, April 3, 2014

எம்.பி.க்கு சலுகைகள்.?

   ( சிறப்பு )
     உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன.  இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுறது.  இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.
     மக்களவை உறுப்பினருக்கு மாதச்சம்பளம் ரூ.16,000.  மாதத் தொகுதிப்படி ரூ.22,000.  மாத அலுவலகப்படி ரூ.4,000.  மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000.   உதவியாளர் ஊதியம் ரூ.14,000.  ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000. இது மட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும்,4,000 கிலோ.லிட்டர் தண்ணீரும், ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர் நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இண்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வடகை மற்றும் இணைப்புக்கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.
     இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகின்றது.  தொகுதியிலிருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.  முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், ஷோபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன.  ஆனால், இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி. நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை.
-- திண்டுக்கல்,  ஆம் ஆத்மி வேட்பாளர். எஸ்.இளஞ்செழியன்.
-- 'தி இந்து' நாளிதழ், செவ்வாய், ஏப்ரல் 1,2014. 

No comments: