Sunday, April 2, 2017

கம்பிகள் அரிப்பைத் தடுக்க...

  கான்கிரீட்  அமைக்க  கம்பி  கட்டியவுடன்  அதை  அரிப்பிலிருந்து  பாதுகாப்பது  முக்கியம்.  இப்போது  கான்கிரீட்டைப்  பலப்படுத்த  பலவிதமான  கட்டுமானப்  பொருள்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  அதுபோலக்  கட்டுமானக்  கம்பியில்  ஏற்படும்  அரிப்பைத்  தடுக்கவும்  பல  உபகரணங்கள்  வந்துள்ளன.  அவற்றில்  ஒன்றுதான்  ஜென்ட்ரிஃபிக்ஸ் ( zentrifix ).  நாள்பட்ட  கான்கிரீட்  கட்டுமானத்தை  பழுதுபார்க்க  இது  மிகப்  பொருத்தமான  கட்டுமானப்பொருள்.
      ஜென்ட்ரிஃபிக்ஸ்  தூள்  போன்ற  வடிவில்  கிடைக்கும்.  இதை  அப்படியே  தண்ணீருடன்  கலந்து  நன்றாகக்  கலக்க  வேண்டும்.  நன்றாகக்  கூழ்  போன்ற  நிலை  வருமாறு  கலந்துகொள்ள  வேண்டும்.  கட்டிகள்  இல்லாதவாறு  காற்றுக்  குமிழ்கள்  இல்லாதவாறு  பார்த்துக்கொள்ள  வேண்டும்.  இதெல்லாம்  கவனமாகப்  பார்த்துக்கொள்ள  வேண்டும்.  அதிகமான  நீர்  இல்லாதவாறும்,  அதேசமயம்  கெட்டியாகவும்  இருக்கக்கூடாது.
     வீட்டிற்கு  வண்ணம்  பூசுவதுபோல்  இந்தக்  கரைசலைப்  பூச  வேண்டும்.  இர்ரும்புக்  கம்பிகளின்  மேல்  அவற்றின்  மேல்  பகுதியை  மூடும்படியாக  இந்த   ஜென்ட்ரிஃபிக்ஸைப்  பூச  வேண்டும்.  இவ்வாறு  இருமுரை  அடிப்பது  அவசியம்.  கட்டுக்  கம்பிகளால்  கட்டப்பட்டு  கம்பிகள்  அடுக்கப்பட்டிருக்கும்.  கம்பிகள்  மற்றும்  கட்டுக்  கம்பிகள்மேலும்  முழுமையாக  இந்த   ஜென்ட்ரிஃபிக்ஸைப்  பூச  வேண்டும்.  இது  ஒரு  கம்பியின்  மேல்பூச்சாக  அணிவிக்க  வேண்டும்.  இதை  ஒரு  கடமையாகச்  செய்யாமல்,  இது  அரிப்பைத்  தடுப்பதற்காகச்  செய்யபடுகிறது  என்பதை  மனதில்  வைத்து  பூச  வேண்டும்.  இது  இப்போது  இந்தியாவில்  பரவலாகக்  கிடைக்கிறது.
-- குமார்.  ( சொந்த வீடு ).    
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  சனி,  டிசம்பர்  27, 2014.  

No comments: