Friday, April 14, 2017

குளிகை

 குளிகை  எனப்படும்  நேரத்தில்  அசுபகாரியங்களைச்  செய்யக்கூடாது.  காரணம்  குளிகை  நேரத்தில்  எதைச்  செய்தாலும்  அதை  மீண்டும்  மீண்டும்  செய்யும்படி  ஆகுமாம்.  எனவே  அசுபமானவற்றைத்  தவிர்ப்பதே  நன்மை  தரும்.
வார  சூலை
     சூலம்  என்பது  குறிப்பிட்ட  திசையில்  குறிப்பிட்ட  நேரத்தில்  பயணம்  செய்தல்  ஆகாது  என்பதைக்  குறிக்கிறது.  அதாவது  பஞ்சாங்கத்தில்  உதய  நாழிகைக்குப்  பிறகு  இத்தனை  நாழிகை  சூலம்  என்று  குறிப்பிட்டிருப்பார்கள்.  அப்படி  குறிப்பிட்ட  நாழிகைக்குப்  பிறகு  வரும்  4  நாழிகையே  சூலம்.  இதனை  விஷக்காலம்  என்பர்.  இங்கு  ஒரு  நாழிகை  என்பது  24  நிமிடங்கள்.  இதைப்  பார்த்து  சூரிய உதய நாழிகை  முதல்  குறிப்பிட்ட  நாழிகை  வரையுள்ள  நேரத்தைக்  கணக்கிட்டு  பிறகு  வரும்  1  மணி  நேரம்  36  நிமிடத்தைத்  தவிர்த்துவிட்டால்  யாவும்  சுபம்.
     நாம்  எவ்வளவுதான்  நாள்,  நட்சத்திரம்  பார்த்து  முக்கிய  வேலையாகக்  கிளம்பினாலும்  இந்த  நேரத்தைக்  கணக்கிட்டுச்  சென்றால்  தடைகளின்றி  வேலைகள்  நடக்கும்  என்று  நம்  முன்னோர்கள்  அறிவுறுத்தப்பட்டும்,  நம்பப்பட்டும்  வருகிறது.
--  ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி.  அகிலாண்டேஸ்வரி ஐயர்.  ( ஜோதிடம்  தெளிவோம் ). பெண் இன்று.
--  ' தி  இந்து'  ஞாயிறு,  டிசம்பர்  28,  2014.  

No comments: