Wednesday, April 19, 2017

டிப்ஸ்...டிப்ஸ்...

*     மதியம்  வைத்த  பருப்பு  சாம்பார்  கொஞ்சம்  மிகுந்து  இருக்கிறதா?  சாம்பாரின்  அளவுக்கு  ஏற்றபடி  கொஞ்சம்  தேங்காய்,  தனியா,  கடலைப் பருப்பு,  சீரகம்,  வெந்தயம்,  மிளகாய் வற்றல்,  ஒன்றிரண்டு  வெங்காயம்  ஆகியவற்றை  வறுத்து,  அரைத்து,  சாம்பாருடன்  சேர்த்துக்  கொதிக்க  விட்டால்... மாலையில்  இட்லி,  தோசை,  பொங்கல்,  உப்புமா  போன்ற  டிபங்களுக்கு  ஏற்ற  சைட்  டிஷ்ஷாக  மாறி  விடும்.
*     ஈஸியான,  டேஸ்டியான  வெங்காய  பக்கோடா  செய்யலாமா?  ஒரு  கப்  கடலைமாவு,  அரை  கப்  அரிசி  மாவு,  அரை  கப்  ரவை,  பொடியாக  நறுக்கிய  வெங்காயம்  3,  பச்சை மிளகாய்  6,  சிறிதளவு  இஞ்சி,  கறிவேப்பிலை,  உப்பு  ஆகியவற்றை  ஒரு  பாத்திரத்தில்  போட்டு,  ஒரு  ஸ்பூன்  நெய்விட்டு,  தேவையான  தண்ணீர்  தெளித்துப்  பிசிறவும்.  இந்த  மாவை  காயும்  எண்ணெயில்  கிள்ளிப்  போட்டுப்  பொரித்தால்... க்ரிஸ்பியான  பக்கோடா  தயார்.
*     ஒரு  டம்ளர்  கெட்டி  அவலை  இரண்டு  டீஸ்பூன்  நெய்யில்  வறுத்து,  அதனுடன்  ஒரு  கைப்பிடி  உடைத்த  கடலை,  ஒரு  கைப்பிடி  கறிவேப்பிலை  சேர்த்து  மீண்டும்  ஒரு  நிமிடம்  வாணலியில்  வறுத்து  எடுக்கவும்.  அதில்  தேவையான  அளவு  உப்பு,  மிளகாய்த்தூள்  தூவிப்  பரிமாறினால்... மாலை  நேரத்தில்  கொறிக்க  மொறுமொறு  ஸ்நாக்ஸ்  தயார்!
*     பகாளாபாத்  ( தயிர்  சாதம் )  தயாரிக்க  அரிசியை  வேக  விடும்போது,  ஒரு  கப்  அரிசிக்கு  ஒரு  ஸ்பூன்  அவல்  அல்லது  ஒரு  ஸ்பூன்  ஜவ்வரிசியையும்  சேர்த்து  வேகவிட்டால்  சாதம்  குழைவாகவும்,  கூடுதல்  சுவையுடனும்  இருக்கும்.
-- அவள் விகடன்.  29-7-2014.
-- இதழ் உதவி :  H. சுரேஷ்,  காரைக்கால்.   

No comments: