Tuesday, April 4, 2017

ஜோதிடமெனும் தேவ ரகசியம்

 ஒவ்வொரு  கிரகங்களும்  மனித  ரூபமாக்கப்பட்டு  அதற்கு  மனைவிகளும்,  அவற்றின்  துணைக்  கோள்கள்  மகங்களாகவும்  ஆக்கப்பட்டன்.
     "சனியின்  உபகோளான  மாந்தி ( TITAN)  சனியின்  ஒரு  துணைக்கோள்.  அது  சனியைச்  சுற்றிவரும்.  எப்போதும்  சனியுடந்தான்  இருக்கும்"  என்று,  சுற்றி  வளைத்துச்  சொல்லி  கொடுப்பட்தைவிட  'சனியின்  மகன்  மாந்தி"  என்று  ஒரே  வார்த்தையில்  ஞானிகளால்  எளிதாக  விளக்க  முடிந்திருக்கும்.
     சூரிய  மண்டலத்தில்  வெகு  தொலைவில்  இருப்பதால்  சூரியனை  சனி  மெதுவாக  சுற்றிவருகிறது  என்பதை  விளக்க, "சனியை  எமன்  அடித்ததால்  சனி  நொண்டியாகி  விட்டான்"  என்ற  ஒருவரிக்  கதை  புரியவைத்து  விடுமே!
     நமது  கிரந்தங்களில்  ஞானிகளால்  கூரப்படும்  ஒவ்வொரு  கதைகளுக்கும்,  கிரகங்களின்  கணவன்  மனைவி,  புத்திரர்கள்  போன்ற  உறவிமுறைகளுக்கும்  பின்னால்  ஒரு  அற்புதமான  விஞ்ஞான  விளக்கம்  ஒளிந்து  கிடப்பதை  தெளிவாக  விளக்க  முடியும்.
    "சந்திரனுக்கு  27  மனைவிகள்.  அவர்களில்  ரோகிணியை  அவருக்கு  மிகவும்  பிடிக்கும்"  என்ற  கதைக்குப்  பின்னால்  பூமியின்  துணைக்கோள்  சந்திரன்  ஒன்று.  மொத்தமுள்ள  நட்சத்திரக்  கூட்டங்கள்  27.  அவற்றில்  ரிஷபராசியின்  முழுனட்சத்திரமான  ரோகிணியில்  சந்திரன்  இருக்கும்போது  அவர்  பலம்  அடைவார்  என்ற  ஜோதிட  உண்மை  இருக்கிறது.
-- 'ஜோதிடக்கலை  அரசு'  ஆதித்ய  குருஜி.
-- மாலை  மலர்.  சென்னை.  வெள்ளி . 26-12-2014.  

No comments: