Saturday, April 22, 2017

தலையில் லப்டப் !

*   இறாலுக்கு  அதன்  தலையில்தான்  இதயம்  இருக்கிறது.
*   வீட்டில்  வளர்க்கப்படும்  தங்க  மீன்கள்  கர்ப்பமாக  இருந்தால்  எப்படி  அழைப்பார்கள்  தெரியுமா?  'ட்வீட்'  என்றே
    அழைப்பார்கள்.
*  வீட்டில்  அதிகம்  தூசி  படிவதற்கு  வெப்புறத்  தூசிகள்  மட்டும்  காரணமல்ல,  நம்  தோலில்  உள்ள  இறந்த  செல்களும்
    காரணம்.  
*   கரப்பான்பூச்சியின்  தலையை  வெட்டினால்கூட  9  நாட்கள்  வரை  உயிருடன்  வாழும்.
*   பொதுவாக  எல்லா  உயிரினங்களுக்கும்  கீழ்  தாடை  இறங்கிதான்  வாய்  திறக்கும்.  ஆனால்,  முதலைக்கு  மட்டும்தான்
    மேல்  தாடை  தூக்கி  வாய்  திறக்கும்.
*  குழந்தையாக  இருந்து  வளர  வளர  நம்  கண்கள்  மட்டும்  வளராமல்  அப்படியே  இருக்கும்,  மற்ற  உறுப்புகள்  வளர்ச்சி
   அடையும்.
*   உலகிலேயே  மிகப்பெரிய  பறவையான  நெருப்புக்கோழியின்  மூளை  அதன்  கண்ணைவிட  மிகச்  சிறியது.
*   பட்டாம்பூச்சிகள்  செடிகளில்  உள்ள  தேனைத்  தன்  வாயால்  சுவைப்பதில்லை.  தன்  கால்களால்தான்  தேனைச்
    சுவைக்கிறது.      
*   ஆங்கில  மொழிக்  கவிதைகளில்  ( Rhymes )  மாதம்,  ஆரஞ்சு,  ஊதா,  சில்வர்  போன்ற  வார்த்தைகளைப்  பயன்படுத்தவே
    மாட்டார்கள்.
*   கம்ப்யூட்டரின்  கீ  போர்ட்டின்  முதல்  வரிசையில்  உள்ள  பட்டனில்  ஒரே  வரிசையில்  typewriter  என்ற  வார்த்தையை  டைப்
    செய்யலாம்.
-- தொகுப்பு:  சிவரஞ்சனி.  (  மாயாபஜார் )
--  'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  புதன், டிசம்பர்  31, 2014. 

No comments: