Tuesday, April 11, 2017

நீதிபதி -- வக்கீல்!

"நீதிமன்றங்களில் நீதிபதிகள்  கிண்டல்  செய்தால்... வக்கீல்கள்  பதிலடி  கொடுப்பது  உண்டா?"
     "பெரும்பாலும்  பொறுத்துக் கொள்வார்கள்.  ஏனெனில்,  வழக்கு  வெற்றியடைய  வேண்டுமே!  ஆனால், பிரிட்டிஷ்  ஆட்சிக் காலத்தில்  எர்ட்லி  நார்ட்டன்  என்கிற  பிரபல  வழக்கறிஞர்  துணிச்சலானவர்.  ஒரு  ( ஆங்கிலேய )  நீதிபதிக்கு,  அவரைக் கண்டாலே  பிடிக்காது.  ஒரு  வழக்கில்  அவர்  வலுவான  வாதங்களை  அடுக்கிக்கொண்டு  இருந்தபோது  அந்த  நீதிபதி  கிண்டலாக, 'மிஸ்டர்  நார்ட்டன்... உங்கள்  வாதங்களில்  சாரமே  இல்லை.  அவை  என்  ஒரு  காது  வழியாக  நுழைந்து  இன்னொரு  காது  வழியாக  வெளியேறிக்  கொண்டிருக்கின்றன  என்றார்.  நார்ட்டன்  அமைதியாக, 'இரு  காதுகளுக்கு  இடையில்  ஒன்றும்  இல்லாவிட்டால்  அப்படித்தான்  நேரும்'  என்றதும்  நீதிமன்றத்தில்  பலத்த  சிரிப்பு!"
-- அ.ஷண்முகசுந்தரம்,  பெங்களூரு.
"சமீபத்தில்  படித்ததில்  ரசித்தது,  சிந்திக்கவைத்தது?"
     "யாருக்காவது  குழி  தோண்டவும்,  அவர்கள்  மீது  மண்ணைப்  போடவும்  விரும்பினால்,  அதை  விதைகளுக்குச்  செய்யவும்!"
-- குணசேகரன்,  புவனகிரி.
 (  நானே  கேள்வி... நானே  பதில்! )  பகுதியில்.
-- ஆனந்த விகடன்.  21-5-2014.    

No comments: