Sunday, April 16, 2017

பஞ்சபூத ஸ்வரூபி!

'அஞ்சிலே  ஒன்று  பெற்றான்  அஞ்சிலே
 ஒன்றைத்  தாவி
 அஞ்சிலே  ஒன்று  ஆறு  ஆக  ஆர்  உயிர்
 காக்க  ஏகி
 அஞ்சிலே  ஒன்று  பெற்ற
 அணங்கைக்கண்டு  அயல்  ஆரூரில்
 அஞ்சிலே  ஒன்று  வைத்தான்  அவன்
 நம்மை  அகித்துக்  காப்பான்'
                                         -- என்பது  கம்பர்  பாடல்.
     இதன்  பொருள் :  பஞ்ச  பூதங்களில்  ஒன்றான  வாயுவின்  புத்திரன்  அனுமன்.  இவன்  நீரைத்  ( கடல் )  தாண்டினான்.  ஆகாய  மார்க்கமாக  இலங்கைக்குச்  சென்றான்.  பூமி  பெற்றெடுத்த  சீதையைக்  கண்டான்.  இலங்கைக்கு  நெருப்பு  வைத்தான்  --  என்கிறது  இந்த  கம்பராமாயணப்  பஞ்சபூத  ஸ்வரூபியாகக்  காட்டுகிறது.
-- தினமலர்.  பக்திமலர்.  டிசம்பர்  18,  2014. 

No comments: