Friday, April 28, 2017

சீனிவாச ராமானுஜன்

மயக்கும்  மாயச்சதுரம்
     ராமானுஜன்  தன்  பிறந்த  நாளை  வைத்து  ஒரு  மாயச்சதுரத்தை  உருவாக்கினார்.

             22              12             18              87
             21              84             32                2
            92              16               7              24
             4              27             82               26
     அதில்  நிரல்,  நிரை,  மூலைவிட்ட  எண்களின்  கூடுதல்  139  என்பது  மட்டுமல்ல,  நான்கு  மூலைகளிலும்  அமைந்த  எண்களின்  கூடுதலும்  139.  நடுவில்  அமைத்த  உட்சதுரத்திலுள்ள  எண்களின்  கூடுதலும்  139.  மற்றும்  பலவகைகளிலும்  கூடுதல்  139  ஆக  அமைந்திருப்பது  இந்த  மாயச்சதுரத்தின்  சிறப்பு.  இதை  ஒரு  பிரம்ம  ரகசியமாக  வைத்திராமல்  அதனை  அமைக்கும்  முறையையும்  விளக்கியுள்ளது  அவரது  பரந்த  மனப்பான்மையைக்  காட்டுகிறது.
     தொடக்கப்  பள்ளி  மாணவரும்  விளையாடக்  கூடியது  அவரது  எண்  பிரிவினை  ஆய்வுகள்.  ஒரு  முழு  எண்ணைப்  பிற  முழு  எண்கள்  மூலம்  எத்தனைவகைகளில்  கூறலாம்  என்பதே  அவரது  தேடல்.  3  என்ற  எண்ணை  3+0,  2+!,  1+1+!  என்ற  மூன்று  வகையில்  அமைக்க  முடியும்.  4  என்ற  எண்ணை  4+0,  3+1,  2+2,  2+!+1,  1+1+1+!  என்று  ஐந்து  பிரிவினைகளால்  அமைக்க  முடியும்.  பார்க்க  எளிதாகத்  தோன்றும்  இவ்வெண்  பிரிவினை  போகப்  போக  எவ்வாறு  நினைக்க  இயலாத  அளவு  முறைகள்  உள்ளன  என்று  வியப்பில்  ஆழ்த்தும்.
--  ச.சீ.இராஜகோபாலன்.  ( கருத்துப்  பேழை ).
-- 'தி இந்து'  நாளிதழ்,  செவ்வாய்,  டிசம்பர்  23, 2014.     

No comments: