Tuesday, October 6, 2009

தமிழ் அறிஞர் !

பெரியார் ஈ. வெ.ரா. வின் விடுதலை பத்திரிகையில் ' விடுதலை ' என்றும் , தலைவர் என்றும் வெளிவந்ததைப் பார்த்திருக்கிறோம் . இப்படி எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் , பாகல்பட்டு வே . மாணிக்க நாயகர் என்ற ஒரு தமிழ் அறிஞர் . நான்காவது தமிழ்ச் சங்க உறுப்பினராக இருந்த இவர்தான் , ஆங்கில F உச்சரிப்பைத் தமிழில் எழுதும்போது 'ஃ ' ( காஃபி ) எழுத்தைப் பயன்படுத்தவும் காரணமாக இருந்தவர் .
இவர் பொறியியல் நிபுணராக இருந்தவர் . சிறந்த நூலறிவும் படைத்தவர் . ஜோதிடத்தில் பிறர் வியக்கும் வல்லமை பெற்றிருந்தார் .

No comments: