Tuesday, October 13, 2009

குரங்கின் நடை .

சார்லஸ் டார்வின் முதல் நூல் " இயற்கை பிரிநிலைத் தத்துவம் " ( THEORY OF NATURAL SELECTION ) 1842 - ல் வெளிவந்தது . அறிவியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்த புத்தகம் அது . அதில் குரங்குகளின் சுபாவத்தை ஆய்வுக்குள்ளாக்கி இருந்தார் . குரங்கு நடக்கும்போது பின்னங்கால்களில் ஒன்றான வலது காலை எடுத்து வைத்தால் , அதே நேரத்தில் முன்னங்கால்களில் இடது கால் அடி எடுத்து என்றும் , முன்னங்கால்களில் வலது கால் அடியெடுக்கும் போது பின்னங்கால்களில் இடதுகால் அடியெடுத்து வைக்கிறது .என்றும் , இவ்விதமே இடது வலதாக நான்கு கால்களும் செயல்படுகின்றன . இதே போல்தான் மனிதனும் நடக்கிறான் . " மனிதன் தனது வலது காலை அடியெடுத்து வைக்கும்போது அவனது இடது கை முன்னே செல்கிறது . வலது கை முன்னே வீசிச் செல்லும்போது இடது கால் அடியெடுக்கிறது . ஏறக்குறைய நடக்கும் முறையில் குரங்கும் மனிதனுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதைக் காண்கிறோம் " என அந்த நூலில் டார்வின் அடிக்கோடு போட்டுக் காட்டியுள்ளாராம் !
--- அ. ப. சங்கர் , அம்பாபுரம் . பாக்யா , ஜூன் 19 - 25 ; 2009 .

No comments: