Wednesday, October 21, 2009

தள்ளுபடி செய்திடலாமே !

இந்தியா சுதந்திரம் பெறும்போது நடந்த பாகப்பிரிவினையின்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் 300 கோடி ரூபாய் தரவேண்டும் என ஒப்பந்தம் நிறைவேறியதாக சமீபத்தில் வெளியான செய்தியை பத்திரிகைகளின் வாயிலாக அறிய நேர்ந்தது .
இந்த ஒப்பந்தப்படி பாகிஸ்தான் 62 ஆண்டுகள் கடந்தும் பணம் செலுத்தவில்லை . அதனால் ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் இந்த தொகை பற்றி பார்லி., யில் அறிவிக்கப்பட்டு வருகிறது எனவும் அறிய முடிகிறது .
பாகப்பிரிவினையின்போது இந்தியா கொடுக்க வேண்டிய பங்குத்தொகையை உடனே செலுத்தி தன் உயரிய பண்பாட்டை நிரூபித்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும்
ஆனால் , பாகிஸ்தான் தன் கடமையை செய்யவில்லையே என்ற ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை .. அது அவர்கள் பண்பாடு .
ஆக , வராக்கடன்கள் என பல ஆயிரக்கணக்கான கடன் பாக்கிகளை ரத்து செய்து வரும் இந்திய அரசு இனி என்றைக்குமே வராது என தெரிந்துபோன பாகிஸ்தான் பங்குப் பணத்தையும் ரத்து செய்வதில் என்ன இடையூறு இருக்க முடியும் .
--- குப்பிலியான்பாலா , கும்பகோணம் . தினமலர் , 12 - 07 - 2009 .

No comments: