Monday, December 15, 2014

திருக்கோயில்.

  திருக்கோயில்  தோற்ற  அமைப்பை  மூவகையாகக்  கூறுவர்.
      1. தான்தோன்றி ( சுயம்பு ).  2. தேவர்,  முனிவர்  நிறுவியது.  3. மனிதர்  நிறுவியது.
தான்தோன்றி:  கற்றச்சர்களின்  உளியால்  செதுக்கப்படாமல்  தானாகத்  தோன்றிய  மூல  மூர்த்தம்  உள்ள  கோயில்  தான்தோன்றி  எனப்படும்.  அம்
      மூர்த்தத்தை  உணர்ந்து  வழிபட்டு  வருவர்.  பின்பு  அவ்விடத்தில்  திருக்கோயில்கள்  உருவாகும்.
தேவர்,  முனிவர்  நிறுவியது.:  தனது  எண்ணத்தை  நிறைவேற்ற  அல்லது  உலக  நன்மையைக்  குறித்துத்  தேவர்களும்  முனிவர்களும்  இறைவனுக்கு
       உருவம்  சமைத்துத்  திருக்கோயில்  நிறுவுவது  தேவ  பிரதிஷ்டை  அல்லது  முனிவர்  பிரதிஷ்டை  எனப்படும்.
 மனிதர்  நிறுவியது.:  அரசர்கள்  அல்லது  மனிதர்கள்  நிறுவும்  திருக்கோயில்  மனித  பிரதிஷ்டை  எனப்படும்.
        இவைகளில்  தான்தோன்றித்  திருக்கோயில்கள்  தவிர  ஏனையவற்றில்  முப்பது  ஆண்டுகளுக்கு  ஒரு  முறை  திருக்குடமுழுக்குச்  செய்யாவிடில்  சக்தி  குறையும்  எனக்  கூறுவர்.
--' தமிழ்நாட்டுத்  திருக்கோயில்  மரபுகள் '  என்ற  நூலில்  பொன்முகிலன்.
-- நூல் உதவி:  செல்லூர் கண்ணன். 

No comments: