Tuesday, August 23, 2016

சுகம் பெற சுலபமான வழி

தர்ப்பணம் புரிவோர் நதி அல்லது குளத்தில் நீராட வேண்டும்.  அதன்பின் இறந்துபோன முன்னோர்களை மனதால் நினைத்து இரண்டு கைப்பிடி நீர் எடுத்து தெற்குப் பார்த்து விடுதல்,  இரு கைகளையும் அகல விரித்து தெற்குப் பார்த்து முன்னோர்களை தியானித்தல்,  இறந்தவர் உருவப்படத்துக்கு படையல் இடுதல், புரோகிதருக்கு தானம் தருதல், முன்னோர் சுமங்கலியாக இறந்திருந்தால், வசதி இல்லாத ஏழைப் பெண்ணுக்கு புடவை - ரவிக்கை, தாம்பூலம் தந்து ஆசி பெருதல், ஏழைகளுக்கு உனவிடுதல் - துறவியர்களுக்கு உணவிடுதல் என்று பல வழிகளில் முன்னோர்களை நினைவு கூறலாம்.  சக்திக்கேற்ப செயல்பட்டு முன்னோர் அருள் பெறுவோமாக!
--   தினமலர். பக்திமலர். ஜூலை, 24, 2014.     

No comments: