Thursday, August 25, 2016

"சமீபத்திய ஆச்சர்யம்"

"ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், இரண்டாம் உலகப் போரில் லட்சோப லட்சம் மனிதர்கள்  கொடூரமாக மரணம் அடையக் காரனமாக இருந்தவர்.  ஆனால், அவர் காலகட்டத்தில்தான் ஜெர்மனியில் மிருகவதைத் தடுப்புச் சட்டம் திருத்தமாக வடிவமைக்கப்பட்டு அமலாக்கப்பட்டதாம்.  ஹிட்லரின் நாஜி படைப் பிரிவின் உயர் பதவிகளில் இருந்த பலர், மிருகங்களின்பால் அளவில்லாத பாசமும் காதலும் கொண்டிருந்தார்களாம்.  இந்த வினோதத்தை என்னவென்று சொல்வது?"
-- அ.குணசேகரன், புவனகிரி.
"அண்ணா பெயரைச் சொல்லி இனி ஓட்டு வாங்க முடியாதா?"
"அந்தத் தலைமுறையின் விளிம்பில் இருக்கும் ஓர் உடன்பிரப்பு சொன்னது இது: 'அண்ணா அன்று எம் பலம்.  இன்று வெறும் எம்பளம்!"
-- தாமு, தஞ்சாவூர்.
-- நானே கேள்வி... நானே பதில்...!  ( தொடரில் இருந்து...)
-- ஆனந்த விகடன்.  9-7-2014. 

No comments: