Sunday, March 1, 2009

புத்தர் !

ஒன்பதாண்டுகள் தன் சீடர்களுக்குப் போதித்த பின் மரணப்படுக்கையிலிருந்தார் ' போதி தர்மா' ( புத்தரின் முன்பிறப்பு ) .
" என் வாரிசாக கொள்கைகளைப் பரப்ப ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்" னு சீடர்களை ஒவ்வொருத்தரா அழைச்சாரு .
" நான் பிறர் காதுகளில் சென்ற்டையுமாறு போதிப்பேன்" னு ஒருத்தர் சொல்ல
" என்னுடைய சதைக்கு நீ பாத்தியதை உடையவன்"ன்னாரு குரு .
அடுத்தவர் வந்து" மக்களையெல்லாம் நேசிப்பேன் எனக்கு பேதமில்லை" ன்னாரு .
" என்னுடைய தோள் உனக்குரியது"ன்னாரு குரு .
அடுத்தவர் வந்து, " நான் புதிய சிந்தனைகளை உருவாக்குவேன்" னு சொல்ல ,
" என் எலும்களுக்கு சொந்தக்காரன் நீ " ன்னாரு குரு .
இனனொரு சீடர் வந்தாரு குருவை வண்ங்கிவிட்டு, எதுவும் பேசாம மௌனமா நின்னாரு .
குரு மகிழ்ந்து, " உன் மௌனமே சக்தி வாய்ந்தது. என் ஆன்மா உனக்குரியது, நீதான் அடுத்த குரு"ன்னாரு .
' ஹிகோ'ன்னு அழைக்கப்பட்ட அந்த சீடரே அந்த 'யென்' மரபின் இரண்டாவது குரு.

No comments: