Friday, March 20, 2009

வடமொழி , வேதம் , சைவம் .

வடமொழியில் ரிக் , யஜுர் , சாமம் , அதர்வணம் என்று நான்கு வேதங்கள் இருப்பது போல் , தமிழில் அறம் , பொருள் , இன்பம் , வீடு என்ற 4 உறுதிப் பொருள்கள் உள்ளன . இவையே ' நான் மறை ' என்று அழைக்கப்படுகிறது . வடமொழி வேதங்களின் உட்கருத்தும் இந்த 4 உருதிப் பொருட்களே .
வேதங்கள் சைவசமயத்தின் பொதுவான கொள்கைகளை விளக்குகிறது . சைவ சமயத்திற்கே உரிய கொள்கைகளை சைவ ஆகமங்கள் கூறுகின்றன . இந்த ஆகமங்கள் மொத்தம் 28 ஆகும் . அவற்றை சிவபெருமான் தனது ஐந்து முகங்களால் படைத்தார் .
திருவடி தீட்சை என்பது சைவ சமயத்தில் சிறப்பாக போற்றப்படுகிறது . சைவ சமய குரவர்கள் நால்வரில் திருஞான சம்பந்தருக்கு சீர்காழியிலும் , திருநாவுக்கரசருக்கு நல்லூரிலும் , சுந்தரருக்கு பண்ருட்டிக்கு அருகில் உள்ள சித்தவட மடத்திலும் , மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையிலும் சிவபெருமான் திருவடி தீட்சை வழங்கினார் .
சைவ சமய சாஸ்திரங்களை கூறும் நூட்கள் ' மெய்கண்ட சாஸ்திரங்கள் ' என்று அழைக்கப்படுகின்றன . அவை : திருவந்தியார் , திருக்களிற்றுபடியார் , சிவஞான் போதம் , சிவஞான சித்தியார் , இருபா இருபது , உண்மை விளக்கம் , சிவப்பிரகாசம் , திருவருட்பயன் , வினா வெண்பா , போற்றிப் பஃறொடை , கொடிக்கவி , நெஞ்சுவிடு தூது , சங்கற்ப நிராகணம் என்ற 14 நூட்களாகும் . தி . ம.பக்தி .ம ஜன .22 .2009 .
சிவன் .
சிவனுக்கு ஈசானம் , தற்புருஷம் , அகோரம் , வாமதேவம் , சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் இருப்பதாக பொதுவாகக் கூறுவார்கள் . ஆனால் , சிவபெருமானுக்கு அதோ முகம் என்ற கீழ் நோக்கிய முகமும் உண்டு .

No comments: