Tuesday, March 3, 2009

ஜோக் !

கடைக்காரர் : விலை அதிகம்னு பாக்காதீங்கம்மா....இந்த செருப்பு நல்லா உழைக்கும் !
கடைக்கு வந்த பெண்மணி : செருப்பெல்லாம் உழைக்காதுப்பா... மனுஷங்க நாமதான் உழைக்கணும் . அதுவும் இந்த செருப்பெல்லாம் வாங்கணும்னா ரோம்பவே உழைக்கணும் .
" ஆல மர இலை 10 , அரச இலை 10 , வேப்பமர இலை 10 ,கூட்டினா என்ன வரும் ? "
" 30 "
" சேச்சே ... குப்பை தான் வரும் !
" உன் மனைவியை நகையோட ஒருத்தன் கடத்திட்டானாமே ?"
" விடுவேனா ? துரத்திட்டுப்போய் நகை பூரா பிடுங்கிண்டு வந்துட்டேன் ".
" ஊழல் பண்ணி மாட்டிக்கிட்டவரை தலைவர் கட்சியைவிட்டுத் தூக்கிட்டார் ."
" ஊழல்ன்னா தலைவருக்குப் பிடிக்காதா ?"
" ஊழல் பிடிக்கும் , மாட்டிக்கிறதுதான் பிடிக்காது !"
" சிஸ்டர் ! நான் ஆப்ரேஷன் முடிஞ்சு , நல்லபடியா வீடு போய் சேருவேன்ல ? "
" நல்ல ' பாடி ' யா வீடு பொய் சேருவீங்க ! "
" ஏதோ ....உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் ம்ழை பெய்யுது ! "
" அப்படியா... இல்லைன்னா ?"
" நிறையவே பெய்யும் ! "
" எலிக்கும் மவுசுக்கும் என்னடா வித்தியாசம் ? "
" தெரியலையே என்னடா ? "
" எலிக்கு பினாடி வால் இருக்கும் , மவுசுக்கு முன்னாடி வால் இருக்கும் ".

No comments: