Sunday, March 8, 2009

எம். ஏ,. பட்டதாரி !

ஒருவர் செக்கு ஆட்டிக் கொண்டிருந்தார் . அப்போது மாட்டை விட்டு விட்டு ரொம்ப நேரமாக செக்கில் குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியே சென்ற எம் . ஏ ,. படித்த பட்டதாரி இளைஞர் இதைப்பார்த்ததும் நேராக செக்குக்காரரிடம் சென்றார் .' ரொம்ப நேரமா செக்கில் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறீர்களே .... மாடு சுற்றாமல் நின்றால் உங்களுக்கு எப்படி தெரியும் ' என்றார் . அதற்கு அந்த செக்காட்டி , ' மாடு கழுத்தில் மணி கட்டியுள்ளேன் . அந்த ஒலி நின்றால் மாடு சுற்றவில்லை என்பது , தெரிந்து விடும் ' என்றார் .
உடனே அந்த பட்டதாரி இளைஞர் , ' மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு தலையை மட்டும் ஆட்டினால் என்ன செய்வீர்கள் ? ' என்று மறுபடியும் மடக்கினார் . செக்காட்டியோ சிறிதும் யோசிக்காமல் , ' மாடு எம். ஏ,. படிக்கவில்லையே ! ' என்றார் .
--- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் . தஞ்சையில் அண்ணாதுரை நூற்றாண்டு விழா கருத்தரங்கில் தலைமை வகித்து பேசும்போது கூறியது .

No comments: