Sunday, March 15, 2009

சுடர் !

செய்திச் சுடர் !
--- சந்திரனை விட பூமி 14 மடங்கு பெரியது .
--- ஒரு நாள் மட்டும் வாழக்கூடிய உயிரினம் ஈசல் .
--- பெட்ரோலியம் ' திரவத் தங்கம் ' என்று அழைக்கப்படுகிறது .
--- நெல்லிக்காயில் வைட்டமின் 'சி ' அதிகம் உள்ளது .
--- கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க உதவிய ராணி எஸபெல்லா தன் வாழ்நாளில் இரண்டே இரண்டு முறை மட்டும்தான் குளித்திருக்கிறாராம்.
--- இந்தியாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707ம் ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள தரங்கம்பாடியில்தான் ஆரம்பிக்கப்பட்டது .
--- பர்மாவில் ஒருவர் இறந்து விட்டால் அவரின் ஆசி வேண்டி , உறவினர்கள் இறந்தவர் வீட்டில் ஒருவாரம் படுத்து தூங்குவார்களாம் .
யானை !
யானையின் துதிக்கை மூக்காக மட்டுமின்றி கைகளைப் போலவும் செயல்படுகிறது . அதன் மேல்பகுதி ' அப்பர் பிங்கர் ' ( மேல் விரல் ) என்றும் , கீழ்ப்பகுதி ' லோயர் பிங்கர் ' ( கீழ் விரல் ) என்றும் அழைக்கப்படுகிறது .
அதன் துதிக்கையில் மட்டும் 40 , 000 க்கும் அதிகமான தசைகள் உள்ளன .
யானை பொதுவாக ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரங்களை உணவு சாப்பிடுவதிலேயே கழிக்கும் .
விண்வெளி --- விலங்குகள் !
--- 1957 - ம் ஆண்டு சோவியத் யூனியன் ' லைக்கா ' என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பியது .
--- 1958 - ம் ஆண்டு அமெரிக்கா ' வாஸ்கா ' , ' பெஞி ' என்ற இரண்டு எலிகளை அனுப்பியது .
--- 1961 - ம் ஆண்டு விண்வெளிக்குச் செல்லும் அதிஷ்டம் ' ஹாம் ' என்ற சிம்பன்ஸி குரங்குக்குக் கிடைத்தது .
--- 1968 - ம் ஆண்டு பிரான்ஸ் தன் பங்குக்கு ' பெலிட்டி ' என்ற பூனையை அனுப்பியது .
வானில் பறக்க முதலில் பலூன்கள்தான் பயன்பட்டன . அதில் ஏற பயந்த மனிதன் , அவற்றில் நாய் , ஆடு , வாத்து , கோழி , போன்ற விலங்குகளை அனுப்பித்தான்.

No comments: