Tuesday, March 17, 2009

திருநாவுக்கரசர் .

பொது மக்கள் தற்காலத்தில் ஏதாவது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதை பார்க்கிறோம் . ஆனால் , இந்த உண்ணாவிரதம் சுமார் ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது .
கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது பழையாறை வடதளி என்று அழைக்கப்படும் சிவன் கோயில் . இது பல்லவர்கள் ஆட்சி காலத்தில் சமண சமயத்தவரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது . சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் , உண்ணாவிரதம் மேற்கொண்டு சமணர்களிடமிருந்து இந்த கோயிலை மீட்டார் .
சர். சி.வி . ராமன் .
சர் . சி . வி . ராமன் திருச்சியில் 1888 -ம் ஆண்டு நவம்பர் 7 -ம் தேதி பிறந்தார் . பின் , விஞ்ஞானியாகி 1933 -ம் ஆண்டு பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கல்வி கழகத்தின் இயக்குனர் ஆனார் .1970 -ம் ஆண்டு நவம்பர் 21 -ம் தேதி மறைந்தார் .
--- தினமலர் . சிறுவர்மலர் . ஜனவரி 2 . 2009 .

No comments: