Friday, October 10, 2014

பல்புகள்.

புவி ஈர்ப்பு சக்தியால் ஒளிரும் பல்புகள்.!
     நம்ப முடிகிறதா?  புவி ஈர்ப்பு சக்தியால் பல்பை எரிய விட முடியுமா?  நம்பத்தான் வேண்டியிருக்கிறது.  Deciwatt. org  எனும் ஒரு பிரிட்டிஷ் கம்பெனி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது!  இச்சாதனையை இந்தக் கம்பெனி இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மின்சாரமின்றி இருக்கும் இடங்களில் பயன்படுத்துவதற்காகவே இம்முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியும் கண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
     ஒரு டைனமோவை இயக்கி மின்சக்தியைப் பெறுவதற்காக ஒரு மூட்டை மணலை இந்த டைனமோவின் சக்கரத்தில் ஒரு கயிற்றின் மூலம் தொங்கவிட்டால்;  அந்த மணல் மூட்டையின் பாரத்தினால் அந்த டைனமோவின் சக்கரம் சுழன்று, டைனமோவை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் இம்மின்சக்தியைக் கொண்டு ஒளிரும் டயோடு  Light Emitting Diode ( Led ) எரியும்.
    இந்த மணல் மூட்டை முழுவதுமாகக் கீழே இறங்கியதும் மூன்றே விநாடிகளில் இம்மூட்டையை மறுபடியும் மேலே இழுத்து விடலாம்.  இம்மாதிரி செய்து வந்தால் 30 நிமிடங்கள் LED பல்புகள் ஒளிரும்.
-- Source with Courtesy: " Times of India "
-- தமிழில்: டி.எம்.எஸ்.  மஞ்சரி. மார்ச் 2013.        
---இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

No comments: