Friday, October 17, 2014

உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம்!

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் என்ன வேறுபாடு?
     உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை  உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்க முடியும்.  ஆனால், உயர்நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் மட்டும்தான் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியும்.  தவிர இரு மாநிலங்களுக்கு நடுவிலோ, இந்திய அரசுக்கும் ஒரு மாநிலத்துக்கும் இடையிலோ பிரச்சனைகள் உண்டானால், அதைத் தீர்க்கும் அதிகாரம்  உச்சநீதிமன்றத்திற்குத்தான் உண்டு.  அடிப்படை உரிமைகளைக் காப்பதில்   உச்சநீதிமன்றம் தானாகவே ஆணையிடலாம்.
     சிவில் வழக்காக இருந்தாலும், கிரிமினல் வழக்காக இருந்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கேள்விகள் எழ்ந்தால்,
 உச்சநீதிமன்றம் தலையிடலாம்!
---தினமலர் சிறுவர்மலர். ஜூலை 12, 2013. 

No comments: