Tuesday, October 21, 2014

தந்தி சேவை!

 160 ஆண்டுகால தந்தி சேவை முடிவுக்கு வந்தது.
     இறுதி நாளில் பலர் ஆர்வமுடன் தந்தி அனுப்பினர்.
     சென்னை, ஜூலை 15-  இந்தியாவில் 160 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த தந்தி சேவை நேற்றுடன் ( 14.7.2013 ) முடிவுக்கு வந்தது.  இறுதி நாளில் பலர் ஆர்வமுடன் தந்தி அனுப்ப வந்தனர்.
     இந்தியாவில் தந்தி சேவை 1850 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாக் தொடங்கப்பட்டது.  கோல்கத்தாவில் இருந்து டைமண்ட்  துறைமுகத்துக்கும்  கிழக்கு இந்திய கம்பெனிகளுக்கும் இடையே முதல் தந்தி சேவை அளிக்கப்பட்டது.  1853ம் ஆண்டு நாடு முழுவதும் 64 ஆயிரம் கி.மீ, தூரத்துக்கு தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது.  தொடர்ந்து வெளி நாடுகளுக்கும் தந்தி சேவை அளிக்கும் வகையில் விவாக்கம் செய்யப்பட்டது.  தபாலைவிட வேகமாக வரும் என்பதால் தகவல் பரிமாற்றத்தில் தந்தி மிக முக்கிய இடத்தைப்பிடித்தது.  ஆரம்ப காலங்களில் விஞ்ஞானி ' மோர்ஸ் ' அறிமுகப்படுத்திய கருவி மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன.
     நம் நாட்டில் தொடக்க காலத்தில் தபால்துறை தந்தி சேவையை நடத்திவந்தது.  1986ம் ஆண்டு முதல் தந்தி சேவையை பிஎஸ்என்எல் நிர்வகித்து வருகிறது.
     ஆயினும் மக்களிடம் வரவேற்பு இல்லாதது, நஷ்டத்தை சந்திப்பதாகக் கூறி தந்தி சேவையை நாடு முழுவதும் ஜூலை 14 ம் தேதியுடன் நிறுத்த பிஎஸ்என்எல் அறிவித்தது.  அதன்படி தந்தி சேவை முடிவுக்கு வந்ததால், இதுவரை தந்தி சேவையை பயன்படுத்தாதவர்களும் தந்தி அலுவலகங்களுக்கு சென்று தங்கள் உறவினர்கலுக்கும், நண்பர்களுக்கும் தந்தி அனுப்பி மகிழ்ந்தனர்.
-- தினமலர். 15 . 7 . 2013.  

No comments: