Wednesday, October 22, 2014

" பொதுநலம் "

" பொதுநலம் என்றால் என்ன?"
     " ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரிகியூரி அம்மையாரிடம், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர்  ' உங்களுக்கு வேண்டியதைக் கேட்கச் சொன்னால் என்ன கேட்பீர்கள்? ' என்று கேட்டார்.  அதற்கு மேரிகியூரி ' எனது ஆராய்ச்சியைத் தொடர ஒரு கிராம் ரேடியம் தேவைப்படுகிறது; ஆனால், அது ஒரு லட்சம் டாலர் விலை என்பதால் என்னால் வாங்க முடியவில்லை ' என்றார் ஏக்கத்துடன்.  அந்த பத்திரிகை ஆசிரியை அமெரிக்கா சென்று ஒரு குழு அமைத்து, பொதுமக்களிடம் நிதி திரட்டினார்.  அந்தப் பணத்தில் ஒரு  கிராம் ரேடியம் வாங்கி அமெரிக்க ஜனாதிபதி கையால் மேரிகியூரிக்கு அளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.  அந்த நிகழ்ச்சியில் ரேடியத்தை வழங்கும் பத்திரத்தைப் படித்துப் பார்த்த மேரிகியூரி தனது பெயருக்கு எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்.  அதைத் தனது ஆராய்ச்சி நிறுவனப் பெயருக்கு மாற்றி எழுதச் சொன்னார் மேரிகியூரி.  அந்த ரேடியம் தனக்குப் பின் தம் சந்ததியினரின் உடமை ஆகிவிடக் கூடாது என்பதில் மேரி கவனமாக இருந்தார்.  அந்தக் கவனம் தான் பொதுநலம் !"
-- ஹெச்.பாஷா, சென்னை - 106.
-- நானே கேள்வி... நானே பதில் !  ஆனந்த விகடன் . 10 . 7 . 2013.  

No comments: