Sunday, October 5, 2014

அதை அலட்சியம் செய்யாதீர்கள்!

  அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா?  செரிமானக் கோளாறு என அலட்சியம் செய்ய வேண்டாம்.  அது தொண்டையில் புற்று நோய் தாக்குவதர்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.  ' கேன்சல் எபிடெமியாலஜி ' இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை இப்படி எச்சரிக்கிறது.  நார்மல் ஆசாமிகளைவிடவும் அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுகிறவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் ஆபத்து 78 சதவீதம் அதிகமாக இருக்கிறதாம்.
இதயம் காக்கும் நாய்!
     ' செல்லப் பிராணிகளை  --  குறிப்பாக நாய்களை  --  வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து குறையும் ' என்கிறது ஒரு ஆராய்ச்சி.  செல்ல நாயைக் கொஞ்சுபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதில்லை;  இதனால் மனநிலையை சமன்படுத்தும் மூளை வேதிப் பொருட்கள் இயல்பான அளவில் சுரக்கின்றன.  இதனால் ரத்த ஓட்டம் சுறுசுறுப்பாகிறது; ரத்தத்தில் கொலஸ்டிராலும் இயல்பான அளவில் இருக்கிறதாம்.
-- ஹெல்த் பிட்ஸ்.  குங்குமம் - 24. 6. 2013.
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர் . திருநள்ளாறு. 

No comments: