Friday, October 24, 2014

அறிவோம்! தெளிவோம்!

 கோயிலில் பின்னமான உருவம் கொண்ட தெய்வ சிலையை வணங்கலாமா?
    தெய்வ சிலையின் உருவத்தை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.  1. அங்கம்,  2. உபாங்கம்,  3. பிரத்யங்கம்.
    கை, கால், விரல்கள், ஆயுதங்கள், கிரீடம் போன்றவை பிரத்யங்கங்களாகும்.  இவற்றில், பின்னம் இருந்தால் தோஷமில்லை.  தொடர்ந்து வழிபாடுகள் செய்து கும்பாபிஷேகத்தின் போது சரி செய்து கொள்ளலாம்.  கை, கால், தலை முதலியன உபாங்களாகும்.  இவற்றில் பின்னம் ஏற்பட்டால் உடன் சரிசெய்து , பிராயசித்த கும்பாபிஷேகம் செய்து வழிபாட்டைத் துவங்கலாம்.
    முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, தொடை முதலியன முக்கிய அங்கங்களாகும்.  இவற்றில் சரிசெய்ய முடியாத பின்னம் ஏற்பட்டால், வேறு விக்கிரகம் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.  இந்த விதிகள் பொதுவானவை.  எவ்வளவு பின்னம் ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு வழியில் சரிசெய்து பூஜை வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் பக்திமலர். ஜூலை 18, 2013.  

No comments: