Saturday, March 14, 2015

வெள்ளை நிற ஆடை.

கேள்வி: " எல்லா  சிவாலயங்களிலும்  இரவு  அர்த்தஜாமத்தில்  மற்ற  நிறப்  புடவையிருந்தும்,  ஏன்  வெள்ளை  நிறப்  புடவையைச்  சாத்துகின்றார்கள்?"
பதில்: " கருமை  நிறம் -- தாமச  குணத்தைக்  காட்டுவது.  செம்மை  நிறம் -- இராஜச  குணத்தைக்  காட்டுவது.  வெண்மை  நிறம் -- சத்துவ  குணத்தைக்  காட்டுவது.  இரவிலே  எல்லா  உயிகளும்  சாந்தமாக  இருக்க  வேண்டும்.  அதனால்தான்  அர்த்த  ஜாமத்தில்  அம்பிகைக்கு  வெள்ளைப்  புடவையைச்  சாத்துகிறார்கள்.  இதே  காரணம்தான்  சரஸ்வதி  தேவி  வெள்ளைக்  கலையுடுத்துவதற்கும்.  ' வெள்ளைக்கில்லை  கள்ளச்  சிந்தை'."

கேள்வி: " சாந்திராயண  விரதம்  யாது?"
பதில்:  " பூர்ணிமை  தொடங்கி  அமாவாசை  வரை  ஒவ்வொரு  பிடி  அன்னங்  குறைத்தும்.  அமாவாசை  தொடங்கி  பூர்ணிமை  வரை  ஒவ்வொரு  பிடி  அன்னம்  அதிகப்படுத்தியும்  புசித்து  அநுஷ்டிக்கப்படும்  பிராயசித்த விரதம்.  சாந்திராயணம்!  திருவிளையாடற்  புராணம் தலவிசேடப்  படலத்தில்  கூறப்பட்டுள்ளது.
--' குமுதம்  வினா - விடை '  நூலில்  திருமுருக  கிருபானந்தவாரியார்  சுவாமிகள்.
--  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர். 

No comments: