Sunday, March 1, 2015

நட்பு

 வயதில்  பத்தாண்டு  மூத்தவரோடும்,  அறிவில்  ஐந்தாண்டு  மூத்தவரோடும்,  வேதமறிந்த  மூன்றாண்டு  மூத்தவரோடும்  சற்றே  முதிர்ந்த  பங்காளியோடும்  நட்பு  கொள்ளலாம்.
    பத்து  வயது  பிராமணன்  எனினும்  பிற  மூன்று  குலத்தார்க்கும்  பெற்ற  தந்தைக்கு  ஒப்பாவான்.  நூறு  வயது  சத்திரியன்  கூட  அவனுக்கு  மகனைப்  போன்றவனே.
    பிராமணன்,  அரசன்,  பெண்,  மணமகன்,  நோயாளி,  சுமைசுமந்தோன்,  தொண்ணூறு  வயது  முதியோன்,  வாகனமேறி வருவோன்  ஆகியோருக்கு  வழிவிட்டு  நிற்க.
   அவர்  யாவரும்  கூட்டமாய்  வந்தால்,  அரசனுக்கும்  பிராமணனுக்கும்  முதலில்  வழிவிடுக.  பிராமணனும்  அரசனும்  எதிரில்  வந்தால்  பிராமணனுக்கே  முதலில்  வழிவிடுக.
--- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்  
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு. 

No comments: