Friday, March 6, 2015

கூடும் நாள், கூடா நாள்.

  மனையாளிடம்  இடையறாத  அன்பு  செலுத்திப்  பருவகாலத்தே  அவளோடு  மகிழ்ச்சி  கொள்க.  மாத  விலக்கில்லா  நாட்களில்  கூடலாம்..
     மாதவிடாய்  நாள்  முதல்  16  நாட்கள்  பெண்ணுக்குப்  பருவகாலம்.  விலக்கு  முதல்  நான்கு  நாட்கள்.  மற்றும்  ஏகாதசி,  திரியோதசி  நாட்களிலும்  கூடற்க.  மீதி  பத்து  நாட்கள்  கூடலாம்.  6, 8 ,10,  12,  14,  16  ஆகிய  இரட்டை  நாட்களில்  கூடினால்  ஆண்மகவு  பிறக்கும் .  5, 7,  9,  11,  13,  15  ஆகிய  ஒற்றை  நாட்களில்  கூடினால்  பெண்மகவு  பிறக்கும்.
     கலவியின்  இன்ப  ஊற்றில்  ஆண்  ஊற்று  அதிகமெனில்  ஆண்மகவும்,  பெண் ஊற்று  அதிகமெனில்  பெண்மகவும்  பிறக்கும்.  இரண்டும்  சமம்  எனில்  பிறப்பது  பேடி  ஆகும்.  ஊற்று  சுரக்கவில்லையெனில்  கரு  உண்டாகாது.
---  காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு. 

No comments: