Sunday, March 8, 2015

பூத வேள்வி.

  கிழக்கில்  இந்திரன்,  தெற்கில்  எமன்,  மேற்கில்  வருணன்,  வடக்கில்  சூரியன்  ஆகியோர்க்கும்,  அவரவர்  பரிவாரங்களுக்கும்  வரிசைப்படி  பலி  வைத்துப்  பூத  வேள்வி  செய்க.
      தேவர்களுக்கு  வீட்டு  வாயிற்படி,  நீர்த்  தேவதைகளுக்கு  நீர்  நிலை,  வன  தேவதைகளூக்கு  உரல்  அல்லது  உலக்கை.  இவ்விடங்களில்  பலிப்  பொருள்  வைத்துப்  படைக்க.
      நடு  வீட்டில்  பிரம்மனுக்கும்,  வடகிழக்கு  மூலையில்  லட்சுமிக்கும்,  தென்மேற்கு  மூலையில்  பத்ரகாளிக்கும்  படையல்  இடலாம்.  படுக்கையின்  தலை  மாட்டில்  லட்சுமிக்கும்  கால்மாட்டில்  பத்ரகாளிக்கும்  படையல்  இடலாம்.
      மேல்  மாடத்தின்  திறந்த  வெளியில்,  அல்லது  வீட்டின்  பின்புறத்தில்  தென்  திசையாக  மண்டியிட்டுப்  பரம்பொருளுக்குப்  பெருஞ்சோற்றினைப்  படையல்  போடுக.
      திசைக்  கடவுளர்,  பகலில்  இரவில்  திரியும்  உயிகளுக்கு  வீட்டு  முற்றத்தில்  படையல்  போடுக.
-- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு. 

No comments: