Tuesday, March 31, 2015

நடந்தால் சார்ஜாகும் செல்!

 செல்போனில்  பேசிக்கொண்டிருக்கும்போது  பேட்டரி  சார்ஜ்  தீர்வது  பயங்கர  டென்ஷன்.  இதற்கு  முற்றுப்புள்ளி  வைத்திருக்கிறது, நோக்கியா  நிறுவனத்தின்  புதிய  கண்டுபிடிப்பு. இந்த  நவீன  செல்போனைக்  கையில்  வைத்தபடி  அல்லது  பாக்கெட்டில்  போட்டு  சும்மா  நடந்தாலோ,  அல்லது  அதை  சிறிது நேரம்  அசைத்தாலோ  அது  தானாக  சார்ஜ்  ஆகிவிடும்.
     இது,  மாயமந்திரம்  அல்ல.  ' பீஸோ  எலக்ட்ரிக்  எஃப்ஃக்ட் '  என்ற  மின்னுற்பத்தி  தொழில்நுட்பம்தான்.
     அசையும்போது  மின்சாரத்தை  உருவாக்கும்  சக்தி  கொண்ட  படிகங்களை,  ' பீஸோஎலக்ட்ரிக்  கிறிஸ்டல் '  என்பார்கள்.  நோக்கியாவின்  புதிய  செல்போனில்  இந்த  ரக  கிறிஸ்டல்கள்  பொருத்தப்பட்டுள்ளதால்தான்  ஆட்டமேட்டிக்  சார்ஜிங்!
---தினமலர்  வாரமலர்.  மார்ச்  28,  2010. 

No comments: