Wednesday, January 22, 2014

சுட்டது நெட்டளவு.

   ஒரு பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது.  ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
     இளைஞன் அந்தச் சிறுவனை பக்கத்தில் அழைத்தார்.  அவன் தோளில் கைபோட்டு, " இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது " என்றான்.  சிறுவன் முகத்தில் வியப்பு.
    " உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?" என்று இளைஞன் கேட்டான்.
     அதற்கு சிறுவன் சொன்னான், " இல்லை !  அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன் ."
-- சிவகாசி சுரேஷ். ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ்,  வியாழன் , நவம்பர் 7, 2013. 

No comments: