Monday, January 27, 2014

தெரிஞ்சுகோங்க !

*  முனிவர்களின் தலைவர் என்றழைக்கப்படும் முனிவர் பெயர் என்ன ?
    துருவாச முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைவர்.
*  வெண்மையான மலர்களை பூஜைக்கு பொதுவாக அதிகம் பயன்படுத்துவதில்லை.  எனினும் நந்தியாவட்டை மட்டும் சிவபூஜையில் விசேஷமாக இடம்
    பெறும் மலராகும்.
*  கோயிலில் சுவாமிக்கு முன்னால் இருக்கும் காளை ( ரிஷப )  வடிவங்களை நந்தி என்கிறோம்.  நந்தி வேறு, ரிஷபம் வேறு என்பதனைக் காட்டும்.
    அஷ்டபரிவாரங்களில்  நந்தி தேவர் கிழக்கிலும், ரிஷபதேவர் மேற்கிலும் இருப்பர்.
*  ' நந்தி ' என்ற பெயர் சிவபெருமானுக்கு உரிய திருநாமமாகும்.  ' நந்தி நாமம் நமச்சிவாயவே ' என்பர் திருஞானசம்பந்தர்.  திருமூலர் திருமந்திரம் எடுத்த
    எடுப்பில், விநாயக வணக்கப்படலான ' ஐந்து கரத்தனை ' எனத் தொடங்கும் பாடலில், ' நந்தி மகன் ' என  விநாயகரைக் குறிக்கும்.
*   நந்தி என்ற சொல்லுக்கு அழிவு அற்றது; குற்றங்கள் இல்லாதது என்று பொருள்.  இத்தனமைகளுடைய சிவபெருமானே நந்தியாவார்.
-- தினமலர் இணைப்பு இதழ்களிலிருந்து.

No comments: