Tuesday, January 7, 2014

இதையும் தெரிஞ்சுக்குவோமே !

*  பணத்தாசை பிடித்து கருமியாய் வாழ்க்கை நடத்திய புரந்தரதாசரை, இசையும் பக்தியும் கைகோர்த்து நல்வழிப்பாதையில் அழைத்துச் சென்றது.
* ' தர்ப்பசு ரஜ்ஜுமாலாம் ' என்கிறது ஆகம சாஸ்திரம்.  கொடி மரத்தின் அங்கங்களில் முக்கியமானது தர்ப்பைக் கயிறு மாலை.  கோயிகளில் கொடியேற்றம்
   என்பது உயிரானது பாசங்களைக் கடந்து இறைவனைச் சென்று அடைவதைக் குறிப்பதாக சைவ சித்தாந்தம் கூறுகிறது.  கொடிமரத்தின் மேல்பாகம்
   இறைவன் இருக்கும் இடம்.  கொடி உயிர்களைக் குறிக்கிறது.  தர்ப்பை பாச பந்தங்களைக் குறிக்கிறது.
*  எருக்கு, கள்ளி போன்றவற்ரை வீட்டில் வளர்க்கக்கூடாது.  நந்தியாவட்டை, செம்பருத்தி, மல்லிகை போன்றவர்ரை வளர்க்கலாம்.
*  35 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு ஏற்பட்டிருக்கிறது, கடந்த ( 23 11.13.) சனிக்கிழமையன்று லோக் அதாலத் நிகழ்வில்.
*  அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின்
   பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
*  வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில்
   வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே புயலுக்கு பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
-- -  ' தி இந்து ' நாளிதழ்களிலிருந்து.

No comments: