Friday, January 24, 2014

அட்சய நவமி.

அள்ளிக்கொடுக்கும் அட்சய நவமி.
     பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களை எல்லா செயல்களை செய்வதற்கும் விலக்கி விடுகிறோம்.  அஷ்டமி, நவமி நாட்களில் தவிர்க்க வேண்டியவை நெடுந்தூர பயணம் மட்டுமே.
     ஜெகம் புகழும் ஸ்ரீராமபிரானின் அவதாரம் நிகழ்ந்தது சித்திரையில் அமைந்த நவமி நாள்.  யுகாதிக்கு ஒன்பதாம் நாள, ராம நவமி என்று போற்றப்படும் திரு நாள்.  கீதோபதேசம் செய்த கண்ணன் அவதரித்தது ஒரு அஷ்டமி நாள்.  இது கோகுலாஷ்டமி.
     சைவர்கள் விரதமிருந்து வழிபாடு செய்யும் நாட்கள் தேய்பிறை அஷ்டமி நாட்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு.
     தெய்வ வழிபாட்டுக்குரிய அஷ்டமி நாட்களில் சிறப்பிடம் பெறுவது சாந்திரமான வளர்பிறை அஷ்டமி நாளாகும்.  இதற்கு ' அட்சய நவமி ' என்று பெயர்.
     திரவுபதியிடமும், மணிமேகலையிடமும் அட்சய பாத்திரங்கள் இருந்தன.  இதில் உள்ள உணவு அள்ள அள்ள குறையாது.  எனவே, இந்த அமுதசுரபிகள் அட்சய பாத்திரங்களாயின.  ' அட்சயம் ' என்றால் வலரக்கூடியது என்று பொருள்.
-- தினமலர். 8-11-2013. 

No comments: